Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மரத்தில் கார் மோதி விபத்து; இமாச்சல பிரதேச ஆளுநர் தப்பினார்  

டிசம்பர் 15, 2020 10:47

சென்னை: ஐதராபாத் அருகே கார் விபத்தில் இமாச்சல பிரதேச ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா உயிர் தப்பினார். 

இமாச்சல மாநில ஆளுநராக  இருப்பவர் பண்டாரு தத்தாத்ரேயா.  பாஜகவின் மூத்த நிர்வாகியாக இருந்த  இவர், மத்திய இணை அமைச்சராக பதவி வகித்து உள்ளார்.  பண்டாரு தத்தாத்ரேயா ஐதராபாத்திலிருந்து சூர்யாபேட்டைக்கு காரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது ஐதராபாத்-விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் நல்கொண்டா மாவட்டம், கைத்தாபுரம் எனும் இடத்தில் அவரது கார் ஒரு மரத்தின் மீது லேசாக மோதி நின்றது. இந்த விபத்தில் ஆளுநர் தத்தாத்ரேயாவுக்கும், அவரது உதவியாளருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் இவர்கள் வேறு ஒரு காரில் ஏறி ஐதராபாத் புறப்பட்டு சென்றனர். அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

தலைப்புச்செய்திகள்